Ticker

6/recent/ticker-posts

மந்தன் சேய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் பாழ்

மந்தன் சேய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் பாழ் 


சனி- கர்மா, மந்தன், மெதுவாகசெயல்படுபவன்
செவ்வாய் -மாங்கல்யகாரகன், கணவன் ,வெப்பம்
சனி செவ்வாய் சேர்க்கை திருமணத்தை தாமதப்படுத்தும் காதல் திருமணம் கலப்பு திருமணம் செய்து காட்டும், தாமத திருமணம் பிரிவை ஏற்படுத்ததாது அவசரபட்டு 28 வயதிற்குள் திருமணம் செய்துவிட்டால் திருமணபந்தத்தை பிரித்துவிடும்.
சனி செவ்வாய் இணைவு ஏற்பட்டாலும் பார்த்துகொண்டாலும் மேற்சொன்னபலன்கள் உண்டு.
மந்தன் சேய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் பாழ் விபத்தை உண்டு செய்யும் அறுவை சிகிச்சை உடலில் காயங்கள் தழும்புகள் இருக்கும் நிலையான தொழில் அமையாது, இந்த இணைவு பிறப்பு ஜாதகத்தில் இருந்தாலும் அல்லது கோட்சாரத்தில் இணைவுகள் ஏற்பட்டாலும் இந்த பலன்களை கொடுக்கும்.
இணைவு 1 5 7 9 ல் ஏற்பட்டாலும் சனி செவ்வாய் தன்பார்வைகளால் பாரத்துகொண்டாலும் சனியின் பார்வைகள் 3 7 10 செவ்வாய் பார்வைகள் 4 7 8 மேற் சொன்ன பலன்கள் நடக்கும்.

இந்த பதிவை திரும்ப திரும்ப படியுங்கள் பல சூட்சமங்கள் புரியும் (தெரிந்தவருக்கு இல்லை தெரியாதவருக்கு மட்டும்தான்)

கர்மாவை கின்டல் செய்யும் அதி புத்திசாலிகளே உன(ங்களு)க்கு கர்ம தொடர்பு இருப்பதால் தான் இந்த மோட்ச ஞானம் ( ஜோதிடம்) குழுவில் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறீர்கள். இனம் இனத்தோடு சேரும் குனம் குனத்தோடு சேரும்.

மோட்ச ஞானம் (கேது) மனோக்கரகன்( சந்திரன்) தொடர்பு அதோடு புந்தியின் தொடர்பு நீ இதில் காசு பார்க்க வேண்டும் என்றால் உன் கர்மக்காரகன் தொடர்பு ஏற்பட வேண்டும். இந்த இணைவுதான் ஜோதிடர் அல்லது ஜோதிடன், நீ வாழ வேண்டும் என்றாலும், சாவ வேண்டும் என்றாலும், நீ அழிய வேண்டும் என்றாலும், நீ எது செய்ய வேண்டும் என்றாலும் உன் கர்மா (சனியின்) தொடர்பு இல்லாமல் அதாவது கர்மா இல்லாமல் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கர்மாவில் இல்லாமல் உன்னால் ஒரு தூசியை கூட நகர்த்த முடியாது.

உன் கர்மக்காரகன் மனதோடு அலையும்போது இழப்பையும் மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும், தேகத்தோடு அலையும்போது எதிர்பு போராட்டம் மாற்றம், ஏமாற்றம், இழப்பை கொடுக்கும். ஆனால் கர்மா ஜீவனோடும் அலையும்போது சுகமாக அலையும்.

கர்மக்காரன் சனி
தேகம் சொவ்வாய்
ஆன்மா சூரியன் 
மனோக்காரகன் சந்திரன்
மோட்சகாரகன் கேது
ஜீவன் குரு

நீங்கள் எல்லாம் ஏன் இந்த குழுவிற்கு வந்தீர்கள் என்பதற்கு என்னிடம் உங்கள் ஜாதக ரீதியான ஜோதிட ரீதியான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை மேலே சுட்டி காட்டி விட்டேன். உங்களுக்கு நிருபிக்கவேண்டும் என்றால் நான் தயார்.

ஒரே சொல் உங்கள் கர்மாதான் என்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால் இந்த ஜோதிடத்தை விட்டு விட்டு சென்று விடுகிறேன் இனி திரும்பி கூட வரமாட்டேன். நான் நிருபத்துவிட்டால் யார் கர்மா இல்லை என்று மறுக்குகிறாரோ அவர்கள் இனி ஜோதிடத்தை தொடக்கூடாது.

வேத நாடி ஜோதிடக்கலை குழுவில். பல தகவல்கள் பதிவிடப்படுகிறது இணைந்து பயன் பெருங்கள்.

மரணம் பாரம்பரியம் முறை தோற்காது 

ஜாதகர் மரணதசை என்று கூறும் மூல நூல்களின் வழியில் விதி விலக்கும் உண்டு ஆனால் தோற்காது

நான்காவது சனி திசை, ஐந்தாவது செவ்வாய் திசை, ஆறாவது குருதிசை, ஏழாவது ராகு திசை

மரண தசை உடனே பயம் கொள்ள வேண்டாம் பல விதி விலக்கு உண்டு,  விதி விளக்கு இல்லை எனில் மரணத்தை கொடுத்துவிடும், அது போல மரணத்தை முடிப்பதற்கு மூன்று கிரகங்கள் முன் வர வேண்டும. ஆனால் விதிவிலக்கு உள்ள ஜாதகர் அந்த கால கட்டத்தில் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களை அனுபவிக்க நேரும்
ராசி அதிபதி தசை லக்கனாதிபதி தசை சனி ஆட்சி உச்சம் பெற்றல் விதி விலக்கு உண்டு.
சில ஒவ்வாத தசா சந்திகளில் மரணம் நிச்சயம் அது மரண விதிகளுக்கும்  ஆயுள் கெட்டி என்று கூறபட்டவரையும் விட்டு வைக்காது .
சில விதி விளக்கு இல்லாத ஜாதகத்தை மரணம் விட்டு வைக்காது மரணத்தை நிகழ்த்திகாட்டும்.
கடைசியாக ஒரு நீச தசையும் உண்டு.

குருவேசரணம் குருவடிசரணம் திருவடிசரணம்

கும்பராசிக்கும், கும்பலக்கனத்திற்கும் எல்லா தசைகளையும் தசைகளாக மட்டும் தான் பார்க்க முடியும், யோகங்களாக பார்க்க முடியாது. இதை சாபம் என்று எடுத்துக்கொள்ளலாமா! அல்லது பாவம் என்று எடுத்துக்கொள்ளலாமா!

அதிர்ஷ்டமும் மரணமும் கண்ணுக்கு புலப்படாத ஒன்று, அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டமாகத்தான் வரும், உங்கள் அவசரத்திற்கு வந்து நிற்காது, ஒருவருடைய யோகம் இன்னொருவருடைய யோகத்தை கெடுக்கும், அழிக்கும், வேர்அறுக்க வைக்கும்.

கஷ்டமான காலங்களில் உங்கள் தேவைகளுக்கு தெய்வங்கள் உதவும், ஆசைகளுக்கு உதாவாது.

கிரகங்களின் இன்னல்களை போக்கும் வல்லமை ஜீவசாமாதிகளுக்கு மட்டும்தான் உண்டு, தேடி தேடி சரனாகதி அடையுங்கள்.

ராகு -துர்க்கை, ராகுகாலம்
கேது - எமகண்டம் , விநாயகர்
திசை மாறி இருக்கும் தெய்வங்களுக்கு நோய் தீர்க்கும் சக்தி உண்டு குறிப்பாக அபரிவிதமான சக்தி உண்டு.

ஜீவசமாதி அவதார சின்னம்
பசு நெய்
நல்லெண்ணெய் 
இலுப்பெண்ணெய்
அகல் தீபம்
மாவிலை
தர்பை

பஞ்சகவ்யம்
கோமியம்
பசுசானம்
அதிக சக்தி உண்டு
சமுத்திரம்
மலை
மலை உச்சி
தெண்ணைமரத்து தேங்காய்

வெறுங்கால் நடை
உண்ணாநோன்பு
உங்களுக்கு எது தேவையோ அதை நோக்கி பயணத்தை தொடங்குங்கள்

Post a Comment

0 Comments