Ticker

6/recent/ticker-posts

பரிகாரங்கள்

1) மூன்றாவது சுற்று ஏழைரைச்சனி நடப்பவர்கள் 

எச்சரிக்கையாக இருங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.

உடல் உபாதைகளை அலட்சிய படுத்தவேண்டாம் ஆரம்பத்திலேயே மருத்துவம் செய்து விடுங்கள்.

காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம். 

ஆஞ்நேயருக்கு வடமாலை சாற்றி வழிபடலாம் 

ராகுதசை நடப்பவர்கள் வடக்கு பார்த்த காளிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடலாம்.

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

******************************************************

2)குருவேசரணம் ( கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு)

"ஓம் ஆம் ஹரீம் க்ரோம் 

ஏஹி தத்தாத்ரேயர் நமஹ"

விதி முந்திக்கொள்ளும் நம்மை இறைவழிபாடுக்கூட செய்ய விடாது.

இந்த பதிவை பிறகு எழுதலாம் என்று எண்ணி இருந்தேன் ஆனால் ஏதோ ஒரு செயல் எண்ணை தூண்டுகிறது.

மிக நீளமான பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல தகவல்கள் இந்த பதிவில் இருக்கும் விருப்பம் இருந்தால் தொடருங்கள்.

நான் அடிக்கடி எழுதுவேன் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்ளும்போது அதாவது தன் பழய நிலைக்கு மாறும்போது பல பேர்அழிவுகளை ஏற்படுத்தி கொள்ளும். அன்டமும் பின்டமும் பஞ்ச பூதத்தால் ஆனது.

நான் ஏன் ஜோதிடத்தை கற்றுக்கொண்டேன் என்று பல தடவை நினைத்து கொண்டு வேதனை பட்டுக்கொண்டு இருக்கிறேன் 

என்ன பலன்கள் நடக்கும் என்பதை ஜோதிடம் மூலம் தெரிந்து கொள்ளலாம் ஆனால் நம்மால் தடுக்க இயலாது ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் பிழைத்து கொள்ளலாம் ஆனால் விதி முந்தி கொள்ளும் விதி வேதாந்தம் பேச சொல்லும் நம்மை கட்டுபட வைக்காது.

ராகுவிற்கு மருத்துவம் பார்ப்பது மிக கொடுரமாக இருக்கும் பல உதாரணங்கள் கூறலாம். இப்போது என்ன நடக்கிறது என்பதை உலகமே பார்த்து நடுங்கிபோய் உள்ளது. மரணபயத்தில் மிரண்டு போகி உள்ளது.

**********************************************

மிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷய மாம்ருதாத் ஓம்

நெய்தீபம் ஏற்றி பாரயானம் செய்யுங்கள் அல்லது ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கச்செய்யுங்கள்.

நம் முன்னோர்கள் சித்தர்கள் ஞானிகள் யோகிகள் கூறியதை கடைபிடித்து வழிநடப்போம்

கண்டிப்பாக அறிவியல் வளர்ச்சி புதுமை எல்லாம் ஒருகட்டத்தில் நின்றுவிடும்.

*********************************************************

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய

சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ"

ஆராஜகம் அநீதி செய்த கொடுமைகள் யாரும் தண்டிக்கமாட்டார்கள் என்ற அகங்காரம் காலம் அடக்கிவிடும்.

காலம் மிகச்சிறந்த மருந்து  (நானும் மகா பாவம் செய்த மாமிச பிண்டம்தான்)

இங்கே கூறியுள்ள மிக எளிமையான மந்திரங்களை நெய்தீபம் ஏற்றி பாராயணம் செய்யுங்கள்

உரு ஏற திரு ஏறும் திரு ஏற தீரும் வினை.

நம்பிக்கையுடன் தினமும் பாரயணம் செய்யுங்கள் மிக மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் எளிமையானது மிகவிரைவில் விடுபடுவோம்.

தென்னாடுடைய சிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

இறைவன் துணை இருந்தால் இந்த பதிவு தொடரும்.

பலருக்கும் தெரிந்த மந்திரம்தான் இருந்தாலும் பரவாயில்லை இது என்ன செய்து விடும் என்று நினைப்பதை விட்டு விட்டு சேர்செய்து எல்லோரையும் பாரயாணம் செய்யசொல்லுங்கள் அதன் மகத்துவத்தை உணரலாம்

சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்

****************************************************

3)பரிகாரங்கள்

குருவடிசரணம் திருவடிசரணம்

கும்ப ராசிகாரர்கள் கடலூர் – காட்டுமன்னார்குடி வழி எய்யலூர் சொர்ணபுரிஸ்வரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்க வேண்டும் விமோசனம் கிடைக்கும்

கடலூர் – காட்டுமன்னார்குடி வழி எய்யலூர் சொர்ணபுரிஸ்வரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்

பொதுவாகவே கும்ப ராசி கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் கிரகங்களின் சோதனைக்கும் வேதனைக்கும் ஆளாக கூடியவர்கள் என்பது எனது அனுபவம்.

**********************************************

4)பரிகாரங்கள்

குருவடிசரணம் திருவடிசரணம்  

சிவ சிவாயநம ஒம

வாழ்வில் வெற்றிபெற செய்ய வேண்டியவை

☀️பூஜை அறையில் குலதெய்வ படத்தை வைத்து கும்பிட ஆரம்பியுங்கள், தினமும் குலதெய்வத்தின் திருநாமத்தை கூறி வழிபடுங்கள்.

ஶ்ரீ சென்டாடும் ஐயானார் துணை

☀️மனதிற்கு லயக்கூடிய அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்த மகான் சித்தர்களை குருவாக நினைத்து தினமும் வழிபடுங்கள் அவர்களின் நாமத்தை உச்சரியுங்கள்.

☀️மாதம் ஒருமுறை முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்துவாருங்கள்.

☀️ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை தினமும் ஜபித்துவாருங்கள்

உங்கள் கர்ம வினை படிப்படியாக குறைந்து உங்கள் வாழ்க்கையில் நன்மை நடக்க ஆரம்பிக்கும்.

குரு தாய் தந்தை மதிக்காத வணங்காத குடும்பம் கரைசேராது.

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

(இயல்புக்கு மாற பேசுவார்கள் ) சிவ சிவாயநம ஒம் 

வாழ்வில் வெற்றிபெற செய்ய வேண்டியவை

☀️பூஜை அறையில் குலதெய்வ படத்தை வைத்து கும்பிட ஆரம்பியுங்கள், தினமும் குலதெய்வத்தின் திருநாமத்தை கூறி வழிபடுங்கள்.

ஶ்ரீ சென்டாடும் ஐயானார் துணை🎠

மனதிற்கு லயக்கூடிய அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்த மகான் சித்தர்களை குருவாக நினைத்து தினமும் வழிபடுங்கள் அவர்களின் நாமத்தை உச்சரியுங்கள்.

☀️மாதம் ஒருமுறை முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்துவாருங்கள்.

☀️ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை தினமும் ஜபித்துவாருங்கள்

உங்கள் கர்ம வினை படிப்படியாக குறைந்து உங்கள் வாழ்க்கையில் நன்மை நடக்க ஆரம்பிக்கும்.

☀️குரு தாய் தந்தை மதிக்காத வணங்காத குடும்பம் கரைசேராது

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

*****************************************************

(இயல்புக்கு மாற பேசுவார்கள் )

சிவ சிவ சிவாய நம
பூச நட்சத்திரம்
குரு உச்சமடையும் நட்சத்திரம் பூசம் ஆகும். மருந்து சாப்பிட உகந்த நட்சத்திரம் பூசம் ஆகும்
ஶ்ரீ தன்வந்தரி பகவான் திருவடி சரணம்
*********************************************************************
கர்வினைகளிலிருந்து விடுபட
முன் ஜென்மம் ஒன்பதாம் இடம் இதற்கு பத்தாம் இடம் நாம் முன் ஜென்ம கர்மாவை குறிக்கும் இந்த இடத்தை ஆராய்ந்தால் நாம் படும் துன்பங்களை கண்டு அறியலாம் இதற்கு ஏழாம் இடம் தீர்வை தரும்.
ஐந்தாம் பாவம் -குல தெய்வ வழிபாடு
அன்னதானம் ஆயுள் ஆரோக்கியம் விருத்தி அடையும், பூர்வ ஜென்ம பாவங்களை போக்க கூடியது.
முன்ஜென்ம வினைகளால் வரும் பிரச்சனைகளுலிருந்து விடுபட
குலதெய்வ வழிபாடு செய்வதாலும் கடல் நீரில் தீர்த்தம்மாடுவதாலும், ( ராமேஸ்வரம்) அன்னதானம் செய்வதாலும் தாய் தந்தை குரு இறைவன் ஜீவசமாதி அடைந்தவர்களின் திருவடியை வணங்குவதாலும் நாம் நவ கிரகத்தால் அனுபவிக்கூடிய கர்ம வினைகளிலிருந்து விடுபடலாம்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்
**********************************************************************
சிவசிவ சிவாயநம சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தல் திங்கட்கிழமை தோறும் சிவனுக்கு பால்அபிசேகம் செய்தல். விநாயகர் வழிபாடு செய்தல் திசை மாறி இருக்கும் தெய்வங்களுக்கு வலிமை அதிகம் மருத்துவகுனம் அதிகம் உண்டு உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களை தேடி வழிபடுங்கள். மரணபயம் போக்க மஹிஷாசுர மர்தினி மந்திர ஜபம் பாரயணம் செய்யலாம். மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் - மரண பயம் நீங்க ஓம் த்ரையம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்! உர்வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!! மந்திரங்களை பாரயணம் செய்யலாம். உதாரணம்: வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர், பிள்ளையார்பட்டி சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்

***********************************************************************************

கார்த்த வீர் யார்ஜுனோ மூல மந்திரம்

ஓம் கார்த்த வீர் யார்ஜுனோ நாம ராஜா பாஹூ ஸஹஸ்வரவான் தஸ்ய ஸ்மரண மாத்ரேண - கதம் நஷ்டம் ச லப்யதே ஓம்.

******************************************************************************

ஸ்ரீ தத்தாத்ரேயர் குருவடிசரணம் திருவடிசரணம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர். இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும்.ஞானம் , மோக்ஷம், நற்குணங்கள் தரும். (க்ஷிப்ர பிரசாதனர்) விரைந்து அருள் செய்பவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற, கடன் தீர, அடமானம் வைத்த பொருள், நகைகளை மீட்ட, காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர், நல்ல பணியாட்கள், வேலை ஆட்கள் அமைத்து கொடுப்பார்கள். ஸ்ரீ தத்தாத்ரேயர் மூலம் மந்திரம் தீட்சையாக பெற்று பாராயணம் செய்து வாருங்கள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் உண்மை உண்மை உண்மை இவரிடம் வரம் பெற்றவரகளுள் ஒருவர் கார்த்தவீரயார்ஜூனன் ஆவார்!

**************************************************************************************

நீ உண்மையாக இரு அது மிக பெரிய பரிகாரம் உன்னை வெறுத்தனவல்லாம் திரும்பி வரும். உண்மை என்பது மிகப்பெரிய கர்ம மருந்து. நீ உன் மன செயலுக்குகாக (நடந்து) வாழ்ந்து வந்தால் கர்மாவின் பிடியில் இருக்கிறாய் என்று பொருள் வினை உன்னை வாட்டி எடுக்கும். மனம்தான் கர்மா கர்மாதான் மனம் மனம்விட்ட வழி கர்மவழி கர்மாவின் கூட்டுதான் கிரகடைவுகள் கிரக அடைவிற்கு ஏற்ப மனதை ஓட்டிசெல்லும் மனம் சந்திரன் அதிகமான சலனத்தை கொண்டது ஒவ்வோருகிரகத்தின் செயலுக்கேற்ப நம்மை பிண்டத்தை தூண்டிச்செல்லும். பிண்டத்தை ஆசைபடவைத்து வேடிக்கை பார்க்கும் காரணம் இல்லாமல் கர்மா பிறப்பு எடுக்காது. சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅

*********************************************************************

கர்வினைகளிலிருந்து விடுபட🦅 முன் ஜென்மம் ஒன்பதாம் இடம் இதற்கு பத்தாம் இடம் நாம் முன் ஜென்ம கர்மாவை குறிக்கும் இந்த இடத்தை ஆராய்ந்தால் நாம் படும் துன்பங்களை கண்டு அறியலாம் இதற்கு ஏழாம் இடம் தீர்வை தரும். ஐந்தாம் பாவம் -குல தெய்வ வழிபாடு அன்னதானம் ஆயுள் ஆரோக்கியம் விருத்தி அடையும், பூர்வ ஜென்ம பாவங்களை போக்க கூடியது. முன்ஜென்ம வினைகளால் வரும் பிரச்சனைகளுலிருந்து விடுபட குலதெய்வ வழிபாடு செய்வதாலும் கடல் நீரில் தீர்த்தம்மாடுவதாலும், ( ராமேஸ்வரம்) அன்னதானம் செய்வதாலும் தாய் தந்தை குரு இறைவன் ஜீவசமாதி அடைந்தவர்களின் திருவடியை வணங்குவதாலும் நாம் நவ கிரகத்தால் அனுபவிக்கூடிய கர்ம வினைகளிலிருந்து விடுபடலாம். சக்கரவர்த்தி கலியபெருமாள்

*****************************************************************************************

கர்மாக்களை கடப்பது எப்படி?

திருச்சிற்றம்பலம் 

மனது எப்போதும் இறை சிந்தனையில் இருக்கவேண்டும், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் இது ஒரு வழியான வழிபாடுகள் கூட இதில் பல ரகசியங்கள் அடங்கி உள்ளது.

நமக்கு தெரிந்ததை நாம் நன்றாக தெரிந்து கொண்டால் போதுமானது, சாதம் இருந்தால் போதும் நீர் ஊற்றி வெங்காயம் ஊருகாய் அல்லது தேங்காய் கீற்றை தொட்டு கொண்டு சாப்பிடலாம் பசி ஆறிவிடும், கொஞ்சம் வசதி இருந்தால் ஏதாவது ஒரு குழம்பு அல்லது சாம்பார் வைத்துகொண்டும் சாப்பிடலாம் இன்னும் வசதியாக இருந்தால் சாதம் சாம்பார் வத்தல் குழும்பு ரசம் மோர் அப்பளம் வடை பாயாசம் என வசதிகளுக்கு ஏற்ப நாம் உணவை தாயாரித்து சாப்பிடலாம் ஆனால் இதில் முக்கியமானது என்ன என்றால் பசி என்ற ஒன்றுக்கான தீர்வதற்கான தீர்வு ஆகும். ஆண்டவன் தினமும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான படிகளை அளந்துகொண்டுதான இருக்கிறான்.

ஜோதிடம் மூலம் நமக்கு உண்டான பிரச்சனைகளை கண்டு பிடிக்க முடியுமா? அந்த பிரச்சனைகள் எந்தக்காலம் வரை நீடிக்கும? நமக்கு எப்போது நல்லகாலம் ஆரம்பம் ஆகும்?  திருமணம் எப்போது? எப்போது வேலை கிடைக்கும்? வியாதி குனமாகுமா? குழந்தை பாக்கியம் உண்டா? எப்போது கிடைக்கும். இது போன்ற பொதுவான கேள்விகளுக்கு ஒரு ஜாதகத்தை பார்த்து பதில் கூறினாலும் போதும். வாழ்க்கைக்கு தேவையான கேள்விகளுக்கு பதில் தெரிந்துவிடும். இதுதான் ஜோதிடர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது

நமக்கு எது தேவையோ அதை எல்லாம் நாம்முன்னோர்கள் சொல்லிகொடுத்து சென்றுவிட்டார்கள். தேவை இல்லாதவற்றை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பலன் சொல்ல தேவையான முறைகளையும் அதற்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதை மிகத்தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள. ஜோதிடத்திற்கு தேவை இல்லாத ஆணிகளை தேடி ----- வேண்டாம். நமக்கு தேவையும் இல்லை.

நாம் கற்றுக்கொள்ளவேண்டியது எது? கற்றுக்கொள்ள வேண்டாது எது? அது எந்த முறையில் யாரிடம் கிடைக்கிறது? என்பதை ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

சில ஆசிரியர்கள் ஜாதக ரீதியாக ஏற்படும் பிரச்சனகளை எவ்வாறு சமாளிக்கவேண்டும் என்பதை தெளிவாக சொல்லித்தருகிறார்கள் நல்லவர்களை தேடி பலன் பெறுங்கள்.

*************************************************

குருவடி சரணம் திருவடிசரணம்

மகான்களை சித்தர்களை  ஞானிகளை குருவை நினைத்தாலும் அவர்களின் பார்வை பட்டாலும் அவர்களின் நாமங்களை உச்சரித்தாலும் நம் பாவங்கள் போக்கபடும்.

உங்களுக்கு சாதகமான நட்சதிரத்தின் குருவை மகான்களை ஞானிகளை தரிசிப்பது மிகுந்த பாக்கியம்

உங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கர்ம வினைகளை போக்குவதற்கும் துணையாக இருப்பார்கள்

குருவடிசரணம் திருவடிசரணம்

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

*************************************************************

குருவடிசரணம் திருவடிசரணம்

கும்ப ராசிகாரர்கள் கடலூர் – காட்டுமன்னார்குடி வழி எய்யலூர் சொர்ணபுரிஸ்வரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்க வேண்டும் விமோசனம் கிடைக்கும்

கடலூர் – காட்டுமன்னார்குடி வழி எய்யலூர் சொர்ணபுரிஸ்வரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்

பொதுவாகவே கும்ப ராசி கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் கிரகங்களின் சோதனைக்கும் வேதனைக்கும் ஆளாக கூடியவர்கள் என்பது எனது அனுபவம்.

பரிகாரங்கள்

Post a Comment

0 Comments